இந்தி சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் ஹ்ரித்திக் ரோஷன். இவர் அடுத்ததாக பிரபல தயாரிப்பு நிறுவனமான ஹொம்பலே பிலிம்ஸ் தயாரிக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கே.ஜி.எஃப் பாகம் 1 & 2, சலார், காந்தாரா போன்ற வெற்றி திரைப்படங்களை தயாரித்தது ஹொம்பலே பிலிம்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹிரித்திக் ரோஷன் மற்றும் ஹொம்பலே இணையும் திரைப்படம் ஒரு மிகப்பெரிய பொருட் செலவில் உருவாக இருக்கிறது. ஹிரித்திக் மற்றும் ஜூனியர் என்.டி ஆர் நடிப்பில் வார் 2 திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகிறது.


