TamilsGuide

தவறான முடிவெடுத்து உயிரை மாயத்துக் கொண்ட தரம் 7 மாணவன்

அம்பலாங்கொடை பகுதியில் இன்று (27) 13 வயது பாடசாலை மாணவன் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தரம் 7 இல் கல்வி பயிலும் பாடசாலை மாணவன் ஒருவரே இன்று காலை அவரது வீட்டில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

குழந்தையின் பெற்றோர், அவரது மரணத்திற்கு மன உளைச்சல் தான் காரணம் என்று கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில வாரங்களில் இலங்கையில் தற்கொலைகளால் பல மரணங்கள் பதிவாகியுள்ளன.

இது அதிகாரிகளின் விசாரணைகளைத் தூண்டியுள்ளது.

முதல் சம்பவம் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் பதிவானது.

அங்கு இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

இது பகிடிவதை காரணமாக ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

வயம்ப தேசிய கல்வியியல் கல்லூரியில் அண்மையில் நடந்த ஒரு சம்பவத்தினால் கல்லூரி விடுதியில் இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment