இலங்கையின் சுற்றுலாத் துறையை குறிவைத்து பல்வேறு போலி செய்திகள் மூலம் அரசாங்கத்தின் பெயருக்கங கலங்கத்தை விளைவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு உரையாற்றிய பிரதி அமைச்சர் ரணசிங்க,
வெலிகம மற்றும் அருகம்பை பகுதிகள் சம்பந்தப்பட்ட இரண்டு குறிப்பிட்ட சம்பவங்கள் மூலம் இது தெளிவாகிறது என்று கூறினார்.
முதல் சம்பவம் வெலிகமாவில் பிலிப்பைன்ஸ் நாட்டவர் ஒருவர் தாக்கப்படும் வீடியோவாகும்.
விசாரணையில் இது 2024 ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இரண்டாவதாக, அருகம்பே பகுதியில் பொது இடங்களில் சுற்றுலாப் பயணிகள் பிகினி அணிவதைத் தவிர்க்குமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது அப்பகுதியில் இன பதற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபை உட்பட முக்கிய உள்ளூராட்சி மன்றங்களில் கட்டுப்பாட்டை ஏற்படுத்த முஸ்லிம் சமூகத்துடன் அரசாங்கம் இணைந்து செயல்பட்டு வரும் நேரத்தில், அருகம்பே குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இனப் பதட்டங்களை ஏற்படுத்தவும், தேசத்தை அபிவிருத்தி செய்வதற்கான அதன் முயற்சிகளை நாசப்படுத்தவும் சிலர் மேற்கொண்ட முயற்சிகளாக அரசாங்கம் இந்த சம்பவங்களைக் கருதுவதாக பிரதி அமைச்சர் ரணசிங்க சுட்டிக்காட்டினார்.
சுற்றுலாத் துறையை குறிவைத்து பொருளாதாரத்திற்கு தீங்கு விளைவிக்க முயற்சிக்கும் எந்தவொரு நபருக்கோ அல்லது குழுவிற்கோ எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுபோன்ற போலிச் செய்திகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்றும் சுற்றுலா பிரதி அமைச்சர் பொதுமக்களை மேலும் கேட்டுக்கொண்டார்.


