TamilsGuide

வெள்ளவத்தையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் குழப்பம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஒட்டி வெள்ளவத்தையில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நினைவேந்தல் பொதுக் கூட்டத்தில் பதற்றமான சூழல் நிலவியுள்ளது.

முள்ளிவாய்க்கால் இறுதிக் கட்டத்தின் போது உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களை நினைவுகூரும் வகையில் அலெக்சாண்டர் வீதிக்கு எதிரே உள்ள கடற்கரைக்கு அருகில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் சிலர் குழப்பங்களை விளைவிக்க முயட்சித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், கடும் எதிர்ப்புக்கு மத்தியில் காவல்துறை பாதுகாப்புடன் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்று முடிந்ததுடன், முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கி வைக்கப்பட்டது.

அத்தோடு, நினைவேந்தல் நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment