TamilsGuide

உயிரிழந்த கொட்டாஞ்சேனை மாணவிக்கு நீதிக்கோரி மட்டக்களப்பில் போராட்டம்

என் மௌனம் என் குற்றமல்ல. உன் செயல் தான் குற்றம் – மௌனத்தைக் கலைப்போம்” எனும் தொனிப்பொருளில் கொழும்பில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, உயிரிழந்த பாடசாலை மாணவிக்கு நீதிகோரிய ஆர்ப்பாட்டமொன்று இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.

இதன்போது உயிரிழந்த உயிரிழந்த மாணவியின் ஆத்மசாந்திவேண்டியும் அவருக்கு நீதிவேண்டியும் கலந்து கொண்டோர் கறுப்புப் பட்டியணிந்து, மெழுகுவர்த்தியேந்தி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இறுதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்குக் கையளிப்பதற்கான மகஜரும் வாசிக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சிவில் சமூகத்தினர்,பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

அம்ஷிகாவிற்கு ஏற்பட்ட நிலைமை இன்னுமொரு மாணவிக்கு ஏற்படுவதற்கு முன்னர் இவ்வாறான செயற்பாடுகளுக்கான சட்ட நடவடிக்கைகள் கடுமையானதாக ஆக்கப்படவேண்டும் எனவும் இதன்போது போராட்டக்காரர்களால் கோரிக்கைகள் முன்னவைக்கப்பட்டன.
 

Leave a comment

Comment