கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவரான போப் ஆண்டவர் பிரான்சிஸ்(வயது 88) கடந்த மாதம் 21-ந்தேதி உடல்நல குறைவால் மரணம் அடைந்தார். அவரது உடல் கடந்த 26-ந் தேதி ரோமில் உள்ள புனித மேரி பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
போப் பிரான்சிஸ் மறைவை தொடர்ந்து புதிய போப்பை தேர்வு செய்யும். மாநாடு மே 7-ந்தேதி தொடங்கும் என்று வாடிகன் அறிவித்தது. அதன்படி இன்று போப் தேர்வு தொடங்குகிறது. வாடிகனில் உள்ள 16-ம் நூற்றாண்டை சேர்ந்த பாரம்பரியமிக்க சிஸ்டைன் சேப்பல் தேவாலயத்தில் புதிய போப்பை தேர்ந்தெடுப்பதற்கான ரகசிய ஆலோசனை கூட்டமும், வாக்கெடுப்பும் நடக்கிறது.
இதற்காக வாடிகனில் 250 கார்டி னல்கள் குவிந்துள்ளனர். ஆனால் 80 வயதிற்குட்பட்ட 133 கார்டினல்கள் மட்டுமே புதிய போப்பை தேர்வு செய்யும் தேர்தலில் பங்கேற்று வாக்களிப்பார்கள். வாக்கெடுப்பில் பங்கேற்க உள்ள கார்டி னால்கள் சிஸ்டைன் தேவா லயத்திற்குள் செல்வதற்கு முன்னர், பைபிள் மீது கை வைத்து ரகசிய காப்பு உறுதி மொழி எடுத்துக்கொள்வார்கள்.
கார்டினல்களை தவிர இரண்டு அவசர கால மருத்துவர்கள், கார்டினால்களுக்கு சமைக்கும் நபர்கள் மட்டுமே சிஸ்டைன் தேவாலயத்திற்குள் அனுமதிக் கப்படுவார்கள். கார்டினல்கள் உள்பட சிஸ்டைன் தேவாலயத்தி்ற குள் செல்லும் அனைவரும் வெளி உலக தொடர்பை துண்டித்துக் கொள்ள வேண்டும்.
இதையடுத்து வாடிகனில் தொலைத் தொடர்பு சேவை துண்டிக் கப்படும். சிஸ்டைன் தேவா லயத்திற்கு உள்ளேயும் வெளி பகுதியிலும் தொலை பேசி மற்றும் இணைய சிக்னல்களை தவிர்க்க ஜாமர்கள் பொருத்தப்பட்டிருக்கும். கார்டினல்கள் தங்கும் மாளிகையிலும் தொலைக்காட்சி, வானொலி, செய்திதாள் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதிய போப் ஆக தேர்வு செய்யப்படுபவருக்கு 3-ல் 2 பங்கு பெரும்பான்மை கிடைக்கும் வரை பல்வேறு கட்ட வாக்கெடுப்பு நடை பெறும். ஒவ்வொரு கார்டி னல் வாக்காளரும் தாம் விரும்பும் வேட்பாளரின் பெயரை வாக்குச் சீட்டுகளில் எழுதி தங்களது வாக்குகளை அளிப்பார்கள்.
இந்த நடைமுறைகளுக்கு பின்னர் சிஸ்டைன் தேவா லயத்தில் அண்மையில் பொருத்தப்பட்ட புகை போக்கியில் கருப்பு நிற புகை வெளியிடப்பட்டால் போப் தேர்வு செய்யப்படவில்லை என்பதை குறிக்கும்.
வெள்ளை நிற புகை வந்தால் புதிய போப் தேர்வு செய்யப்பட்டதை குறிக்கும். போப் தேர்வு செய்ய கர்டினல்கள் வாக்கு செலுத்திய சீட்டுகள் உடனடியாக எரிக்கப்படும்.
புதிய போப் தேர்வு போட்டியில் இத்தாலியை சேர்ந்த பியட்ரோ பரோலின்(வயது 70), ஹங்கேரியை சேர்ந்த பீட்டர் எர்டோ (72), பிலிப்பைன்ஸை சேர்ந்த லூயிஸ் அன்டோனியோ டாக்லே (67), உள்பட 8 பேர் உள்ளனர்.
போப் தேர்தலில் இந்தியாவைச் சேர்ந்த பிலிப் நேரி பெராவ், பசேலியோஸ் கிளீமிஸ், அந்தோணி பூலா, ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காட் ஆகிய 4 கார்டினல்கள் வாக்களிக்க உள்ளனர்.


