TamilsGuide

செவ்வந்தியின் தோற்றத்தில் மற்றுமொரு பெண்

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் இஷாரா செவ்வந்தியின் உருவத்தை ஒத்த வகையில் உள்ள மற்றுமொரு பெண் குருணாகல், குளியாப்பிட்டி பகுதியில் வைத்துப் பொலிஸாரினால்  கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் குளியாப்பிட்டி காணி பதிவு அலுவலகத்திற்கு வந்திருந்த நிலையில் அவர்  செவ்வந்தியாக இருக்கலாம்  என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட பெண் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இஷாரா செவ்வந்தியை போன்ற உருவமைப்பு கொண்ட பெண்கள் அனுராதபுரம் மற்றும் மத்துகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment