காஷ்மீரில் கடந்த மாதம் 22-ந்தேதி பஹல்காம் சுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு பின் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ரஷ்யாவின் உதவியை நாடும் பாகிஸ்தான் நாடியுள்ளது.
ரஷிய செய்தி நிறுவனத்துக்கு பேட்டி கொடுத்த ரஷ்யாவுக்கான பாகிஸ்தான் தூதர் முகமது காலித் ஜமாலி, "இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் நல்ல உறவில் இருக்கும் ரஷ்யா, இருநாடுகளுடனான பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் செய்ய வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார்.


