TamilsGuide

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருந்து மைக் வால்ட்ஸ் விலகல்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் அரசில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பதவி வகித்து வருபவர் மைக் வால்ட்ஸ்.

இதற்கிடையே, மைக் வால்ட்ஸ் தனது பதவியிலிருந்து விலக உள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஏமனில் உள்ள எரிபொருள் சேமிப்பு வளாகத்தின் மீது அமெரிக்கப் படைகள் திட்டமிட்ட தாக்குதலை குறிப்பிட்டிருந்த சிக்னல் கேட் என்ற செய்தியிடல் பயன்பாட்டில் தற்செயலாக ஒரு பத்திரிகையாளரைச் சேர்த்ததை அடுத்து அவர் பதவி விலக முடிவு செய்துள்ளார் என தெரிவிக்கப்பட்டது.

தற்செயலாக சேர்க்கப்பட்ட பத்திரிகையாளர் அந்தப் போர் ரகசியங்களை வெளிப்படுத்தியதாக தெரிகிறது.

அதிபர் டிரம்பின் இரண்டாவது பதவிக் காலத்தில் மூத்த தலைமைக் குழுவில் நியமிக்கப்பட்ட முதல் உறுப்பினர் மைக் வால்ட்ஸ் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பாதுகாப்பு செயலாளராக உள்ள மார்கோ ரூபியோ தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பொறுப்பை கூடுதலாக வகிப்பார் என அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
 

Leave a comment

Comment