TamilsGuide

எஸ்.பி.வேலுமணியின் வீட்டிற்கு சென்று புதுமண தம்பதியினரை வாழ்த்திய ரஜினிகாந்த்

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான எஸ்.பி.வேலுமணியின் மகன் விஜய்விகாஸ் திருமணம் கடந்த மார்ச் 3 ஆம் தேதி மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

நடிகர் ரஜினிகாந்தை, எஸ்.பி. வேலுமணி நேரில் சந்தித்து தனது மகன் திருமணத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்து அழைப்பிதழை வழங்கினார். ஆனால் படப்பிடிப்பு பணிகளில் தன்னை முழுமையாக ஈடுப்படுத்திவிட்டதால் ரஜினிகாந்தால் திருமணத்தை நேரில் சென்று பங்கேற்க முடியவில்லை.

அதனால் படப்பிடிப்பு முடிந்து வந்தவுடன் இன்று எஸ்.பி. வேலுமணி வீட்டிற்கு சென்று மணமக்களை வாழ்த்தி அவருக்கு மிகவும் பிடித்தமான ஸ்ரீ ராகவேந்திரா அவர்களுடைய உருவ படத்தை பரிசாக வழங்கினார். அப்போது எடுத்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
 

Leave a comment

Comment