TamilsGuide

வாக்குமூலம் வழங்கிய பின்னர் ரணில் விக்ரமசிங்க லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இருந்து வெளியேறினார்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வாக்குமூலம் அளித்த பின்னர், லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இருந்து வெளியேறினார்.

ஊவா மாகாண முதலமைச்சராக இருந்த காலத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவின் நிதி முறைகேடு வழக்கு தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துகள் குறித்து வாக்குமூலம் அளிக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு  லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அழைப்பு விடுத்திருந்தது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஏப்ரல் 17 ஆம் திகதி லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு முதலில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தாலும், அவர் ஆஜராக இயலாமை குறித்து CIABOCக்கு அறிவித்து, இன்று ஆஜராகுமாறு கோரியிருந்தார்.
 

Leave a comment

Comment