மார்ச் 28 அன்று மியான்மர் நாட்டில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவான இந்த பயங்கர நிலநடுக்கத்தால் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
மியான்மரை தொடர்ந்து தாய்லாந்து, இந்தியா, பாகிஸ்தான் , தைவான், இந்தோனேசியா ஆகிய தெற்காசிய நாடுகளில் தொடர்ச்சியாக மிதமான நிலநடுக்கங்கள் பதிவாகின.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 4.43 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின.
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.