TamilsGuide

தம்பலகாமம் ஈச்சநகர் வனப்பகுதியில் துப்பாக்கி மீட்பு

தம்பலகாமம் முள்ளிப்பத்தானை ஈச்சநகர் வனப்பகுதியிலிருந்து நேற்று இரவு  T-56 ரக துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கந்தளாய் சூரியபுர பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டிருந்த தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த  துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் குறித்த  சம்பவம் தொடர்பாக தம்பலகாமம் பொலிஸார் மேலதிக  விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a comment

Comment