TamilsGuide

மக்காச்சோள இறக்குமதி அனுமதிக்கு தனக்கு இலஞ்சம் கொடுக்கப்பட்டது – அமைச்சர் லால் காந்த

மக்காச்சோளம் இறக்குமதியாளர்களால் தனக்கு இலஞ்சம் கொடுக்கப்பட்டதாக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டீ. லால் காந்த தெரிவித்துள்ளார்.

ஒரு நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் லால் காந்த, கடந்த நான்கு மாதங்களில் சிலர் தன்னை சந்தித்து மக்காச்சோளத்தை இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

அவர்கள் அதற்காக தனக்கு இலஞ்சம் கொடுக்க முயன்றதாகவும் அவர் கூறினார்.

அரசியலில் இருந்து ஊழலை முற்றிலுமாக ஒழித்துள்ளதாக அரசாங்கம் நிரூபித்துள்ளதாக அமைச்சர் லால் காந்த கூறினார்.

இருப்பினும், பொது சேவைகளில் ஊழல் அதிகமாக இருப்பதாக அவர் மேலும் கூறினார்.
 

Leave a comment

Comment