TamilsGuide

ஜனாதிபதி மாளிகையைக் கைப்பற்றிய சூடான் இராணுவம்

சூடான் இராணுவம் அந்நாட்டின் ஜனாதிபதி மாளிகையைக் கைப்பற்றியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

சூடானிய ஆயுதப் படைகள் (SAF) கார்ட்டூமில் உள்ள ஜனாதிபதி மாளிகையைக் கைப்பற்றியுள்ளதாக சூடானின் உள்ளூர் ஒளிபரப்பாளரும் சர்வதேச செய்தி நிறுவனங்களும் வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டன.

சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் அழிக்கப்பட்ட அரண்மனைக்குள் வீரர்கள் இருப்பதைக் காட்டின .

அதேவேளை தலைநகரின் சில மையப் பகுதிகளில் இடைவிடாது துப்பாக்கிச் சூடு சத்தங்கள் கேட்டதாக சாட்சிகளை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

Leave a comment

Comment