TamilsGuide

இறக்குமதி செய்யப்பட்ட 9,400 சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

இறக்குமதி செய்யப்பட்ட 47 அட்டைப் பெட்டிகளில் ஒரு தொகை சிகரெட்டுகளை கடத்த முயன்ற 43 வயது நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபரிடம் இருந்து 9400 இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகள் அடங்கிய 47 அட்டைப் பெட்டிகள் கைப்பற்றப்பட்டன.

யட்டியானாவில் வசிக்கும் அந்த நபர் நேற்று இரவு இலங்கைக்கு வந்திருந்த வேளையில் கைது செய்யப்பட்டார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a comment

Comment