TamilsGuide

விரைவில் இந்தியா வரும் சுனிதா வில்லியம்ஸ்

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் கடந்த ஒன்பது மாதங்கள் சிக்கத் தவித்த சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்பியதில் மகிழ்ச்சி அடைவதாக அவரது குடும்பத்தார் தெரிவித்தனர்.

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பியது குறித்து அவரது குடும்பத்தார் (அண்ணி) தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தனர். அப்போது, "அந்த தருணம் மிகவும் அற்புதமாக இருந்தது. எங்களிடம் அவர் எப்போது இந்தியா வருவார் என்ற தகவல் இல்லை. ஆனால் அவர் நிச்சயமாக விரைவில் இந்தியாவுக்கு வருவார் என நம்புகிறேன்," என்று சுனிதா வில்லியம்ஸ் அண்ணி ஃபல்குனி பாண்ட்யா தெரிவித்தார்.

"அவர் இந்தியா மற்றும் இந்தியர்களிடமிருந்து அன்பை உணர்கிறார். அவர் திரும்பி வருவார் என்பது எனக்குத் தெரியும். இது நேரம், அட்டவணை மற்றும் தளவாடங்களின் விஷயம்" என்று திருமதி பாண்ட்யா கூறினார்.

சுனிதா வில்லியம்ஸ் வீடு திரும்பிய பிறகு, கோவிலில் இருந்து பேட்டியளித்த பாண்ட்யா, "எல்லாம் நன்றாக நடந்ததற்காக கடவுளுக்கு நன்றி தெரிவித்ததாக," கூறினார்.
 

Leave a comment

Comment