TamilsGuide

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம்-சிறைச்சாலை அதிகாரி தொடர்பில் அறிவிப்பு

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பூஸா சிறைச்சாலை அதிகாரி ஒருவரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நேற்று கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவல முன்னிலையில் கொழும்பு குற்றவியல் பிரிவினால் ஆஜர்படுத்தப்பட்ட போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

இதேவேளை சந்தேகநபர் கடமை தவறியதன் காரணமாக இந்தக் குற்றம் நடந்ததா என்பதைக் கண்டறிய விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்ததுடன் துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச்சென்ற சந்தேக நபரைக் கைது செய்ய சந்தேகநபர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சந்தேக நபரின் கையடக்க தொலைபேசி அழைப்புகளின் பதிவை பெற்றுக்கொள்வதற்கு அனுமதி வழங்குமாறும் நீதிமன்றில் பொலிஸார் கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது
 

Leave a comment

Comment