TamilsGuide

சிரியாவில் தொடரும் பதற்றநிலை - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 524 ஆக அதிகரிப்பு 

சிரியாவின் பாதுகாப்புப் படையினருக்கும் பஷார் அல்-அசாத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் தாக்குதல் சம்பவத்தில் 340க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோர் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

பதவி நீக்கம் செய்யப்பட்ட பஷார் அல்-அசாத்தின் ஆட்சியுடன் தொடர்புடைய போராளிகளை ஒடுக்குவதற்காக அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கை பாரியை வன்முறையாக மாறியுள்ளது.

இரண்டாவது நாளாகவும் தொடரும் இத்தாக்குதலில் 524 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 213 பேர் பாதுகாப்புப் படையினர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
 

Leave a comment

Comment