TamilsGuide

கொழும்பு பெரிய பள்ளிவாசல் விடுத்துள்ள அறிவிப்பு

புனித ரமழான் நோன்பு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை  ஆரம்பமாகும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது.

ஹிஜ்ரி 1446 புனித ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு இன்றையதினம் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.

இதன்போதே, ரமழான் நோன்பு தொடர்பான அறிவிப்பு வெளியானது

எனினும், நாட்டின் எந்தவொரு பிரதேசத்திலும் ரமழான் மாத தலைப்பிறை தென்பட்டதற்கான ஆதார பூர்வமான தகவல்கள் இல்லை என்றும்

ஷஹ்பான் மாதத்தை 30ஆக பூரணப்படுத்தி ஞாயிற்றுக்கிழமை புனித நோன்பு ஆரம்பமாகும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment