TamilsGuide

சட்ட அமுலாக்க அதிகாரிகளின் நடவடிக்கை தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் கவலை

கொட்டாஞ்சேனையில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களின் மரணம், அண்மையில் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பாக சட்ட அமுலாக்க அதிகாரிகளின் நடவடிக்கைகள் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) கவலை வெளியிட்டுள்ளது.

இது குறித்து அறிக்கை ஒன்றைய வெளியிட்டுள்ள BASL, இது நாட்டின் சட்டத்தின் ஆட்சிக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக சுட்டுக்காட்டியுள்ளது.

சட்ட அமுலாக்க முகவர், அதாவது காவல்துறை மற்றும் அதிகாரிகள், இது போன்ற சம்பவங்களைத் தடுக்க மிகுந்த பொறுப்புடன் செயல்பட வேண்டியது அவசியம்.

இது சட்ட அமைப்பின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை சிதைக்கும்.

குற்றச் செயல்களின் அதிகரிப்பை எதிர்கொள்வதில் சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் ஒருபோதும் தீர்வாக இருக்க முடியாது.

அரசின் சட்டத்தின் ஆட்சியை கடைபிடிக்கும் போது குற்றங்களை சிறந்த முறையில் கட்டுப்படுத்த முடியும் என்றார்.

சந்தேகநபர்கள் பொலிஸாரின் கைகளால் எவ்வாறு கொல்லப்பட்டனர் என்பதை விசாரிக்க உடனடியாக பக்கச்சார்பற்ற விசாரணையை ஆரம்பிக்குமாறு BASL, பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு (IGP) அழைப்பு விடுத்துள்ளது.

மேலும் இது போன்ற பாரதூரமான என்கவுண்டர் கொலைகள் மற்றும் காவலில் வைக்கப்பட்ட மரணங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபரை கேட்டுக் கொள்வதாகவும் BASL கூறியுள்ளது.

காவலில் வைக்கப்பட்ட மரணங்கள் மற்றும் சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் போன்ற சம்பவங்கள் சமூகத்தில் இருந்து களையப்படுவதை உறுதிசெய்வதற்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு எதிராக காவல்துறை தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் BASL வலியுறுத்தியுள்ளது.
 

Leave a comment

Comment