TamilsGuide

பூசா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் தொலைபேசிகள் மீட்பு

பூசா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் சிறப்பு பிரிவு கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள அறையில் தொலைபேசிகள் ஒன்றும் மற்றும் பல சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக, சிறப்பு அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

நேற்று சிறப்பு அதிரடிப் படை குழுவினர், உயர் பாதுகாப்பு சிறைச்சாலையின் பிரிவு Dஇன் 83வது அறைக்குள் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களில் ஒரு நவீன தொலைபேசி  ஒரு கேபிள், ஒரு சிம் கார்ட், ஒரு பேட்டரி சார்ஜர் மற்றும் அடையாளம் காணப்படாத அளவு போதைப்பொருள் ஆகியவை அடங்கும் என்று சிறப்புப் பணிக்குழு தெரிவித்துள்ளதுடன் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் சிறை நிர்வாக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன
 

Leave a comment

Comment