TamilsGuide

வெளியானது மின் தடைக்கான காரணம்

கடந்த பெப்ரவரி 09 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் தடைக்கான காரணத்தை இலங்கை மின்சார சபை வௌியிட்டுள்ளது.

அதன்படி, மின் பரிமாற்றத்தில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வு காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக சபை தெரிவித்துள்ளதுடன் மின் தடை குறித்த விசாரணையைத் தொடர்ந்து அறிக்கை ஒன்றை வௌியிட்டு இலங்கை மின்சார சபை இதனை வௌியிட்டுள்ளது.

எனவே மீண்டும் இவ்வாறான நிலை ஏற்படுவதைத் தடுக்க குறுகிய மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது
 

Leave a comment

Comment