TamilsGuide

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதியளவில் நடத்த முடியும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அவைத் தலைவர் பிமல் ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றின் சட்டவிளக்கத்தின் பின்னரும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி அளவில் தேர்தலை நடத்தக்கூடிய வழியுண்டு எனவும் அவர் தெரிவித்தார்.
 

Leave a comment

Comment