TamilsGuide

கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

கனடாவின் இட்டோபிகொக் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்றில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காயம் அடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதித்ததாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்த இருவரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த மற்றும் உயிரிழந்தவரின் ஆள் அடையாள விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை

இளம் வயதினர் இருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இட்டோபிகொக்கில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. 
 

Leave a comment

Comment