கிழக்கிலங்கையின் மிகப் பழமையான அம்மன் ஆலயங்களுள் ஒன்றான மட்டக்களப்பு தேற்றத்தீவு வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் புனராவர்த்தன அஸ்டபந்தன நவகுண்டபக்ஷ பிரதிஸ்டா மகா கும்பாபிஷேகம் நேற்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.
தேற்றாத்தீவின் இயற்கை அழகு கொஞ்சும் கடற்கரையில் அமர்ந்து, பக்தர்களுக்கு வேண்டும் வரமளிக்கும் வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் கும்பாபிசேகத்திற்கான பூஜைகள் கடந்த 29ஆம் திகதி ஆரம்பமானது.


