TamilsGuide

7 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு காலணி வழங்க நடவடிக்கை

250 இற்கும் குறைவான மாணவர்கள் கற்கும் பாடசாலைகளில் உள்ள மாணவர்களுக்கு இலவசமாக பாடசாலை காலணிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதமர் ஹரினி அமரசூரிய இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  250 மாணவர்களுக்கும் குறைவான மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகளில் உள்ள மாணவர்களுக்கு, பாடசாலை காலணியை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்தவகையில், 7 இலட்சம் மாணவர்களுக்கு இவ்வாண்டு காலணி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” இவ்வாறு பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment