TamilsGuide

நெல் கொள்முதலாளர்களுக்கு சலுகை கடன் வசதி

சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்களுக்கு அரச வங்கிகள் ஊடாக மானிய வட்டி விகிதத்தில் கடன் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கடந்த பருவங்களில் இத்திட்டம் அதிக முன்னேற்றம் அடைந்துள்ளதை அவதானிக்கப்பட்டதால், 2024/25 பருவத்தில் இருந்து ஒவ்வொரு பருவத்திலும் இத்திட்டத்தை செயல்படுத்துவது விரும்பத்தக்கது என அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறிப்பிட்ட அளவுகோல்களுக்கு உட்பட்டு அதிகபட்ச தினசரி 25 மெட்ரிக் தொன் நெல் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு இந்த சலுகை கடன் முறை பொது மற்றும் தனியார் வங்கிகள் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 

Leave a comment

Comment