TamilsGuide

யாழ். வடமராட்சியில் கவிழ்ந்த நிலையில் கரையொதுங்கிய படகு

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு கடற்கரை பகுதியில் படகொன்று கவிழ்ந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. வடமராட்சி கிழக்கு உடுத்துறை, ஐந்தாம் பனையடி பகுதியிலையே இன்று  காலை  OFRP-6224JFN  என்னும் இலக்கமுடைய குறித்த படகு கரை ஒதுங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயந்திரமற்ற நிலையில்  குறித்த படகு கரையொதுங்கி இருப்பதால் இது கடத்தல் காரர்கள் பயன்படுத்திய படகாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a comment

Comment