• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரொறன்ரோவில் படுகொலைச் சம்பவங்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

கனடா

ரொறன்ரோவில் படுகொலைச் சம்பவங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. ஸ்காப்ரோவில் நபர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் ஸ்காப்ரோவின் எங்லிங்டன் மற்றும் மார்க்கம் வீதிகளுக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த நபரை பொலிஸார் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

எனினும் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மற்றும் சந்தேக நபர்கள் பற்றிய விபரங்கள் எதுவும் பொலிஸார் வெளியிடவில்லை.

இந்த ஆண்டில் இதுவரையில் 82 படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இதில் 42 சம்பவங்கள் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

Leave a Reply