TamilsGuide

அரிசி இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நீடிப்பு

அரிசி இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் எதிர்வரும் 10ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.

அரிசியை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைய இருந்தது.

இந்தநிலையில் அரிசியை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட காலத்தை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை தனியார் இறக்குமதியாளர்கள் இந்த காலப்பகுதியில் 16,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்துள்ளனர். அத்துடன் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி தொகையில் 75 ஆயிரம் கிலோகிராம் அரிசி மனித பாவனைக்கு உகந்ததல்ல என்பது கண்டறியப்பட்டு, அவற்றை மீள் ஏற்றுமதி செய்ய சுங்கத் திணைக்களம் குறித்த இறக்குமதியாளர்களுக்கு அறிவுறுத்தியும் இருந்தனர்

அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக இந்தியாவில் இருந்து 70 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்து இரண்டாம் தொகை அரிசியை இறக்குமதி செய்ததுடன் இந்தியாவில் இருந்து 60 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை எதிர்வரும் 31ஆம் திகதிக்குள் இறக்குமதி செய்வதாக வர்த்தக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
 

Leave a comment

Comment