TamilsGuide

வருமானம் பெறுபவர்களுக்கு நிவாரணம்

ஜனாதிபதி இன்று நாடாளுமன்றில் ஆற்றிய உரையின் போது Paye tax தொடர்பில் அவர் கருத்து தெரிவித்திருந்தார்.

அதன்படி நாங்கள் மூன்றாவது மதிப்பாய்வைத் தொடங்கியபோது, ​​​​எங்கள் முன்மொழிவுகள் தொழில் வல்லுநர்களுக்கு விதிக்கப்பட்ட வருமான வரி பற்றியது.

மீண்டும் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தோம், இன்னிலையில்  வரி வரம்பு ஒரு இலட்சத்திற்கு மேல் காணப்பட்டது. எங்களால் அதை 150,000 ஆக உயர்த்த முடிந்ததுள்ளது.

அதன்படி, மாதம் 150,000 ரூபா சம்பளம் பெறுபவர் 100% வரி விலக்கு. 200,000 சம்பாதிக்கும் நபருக்கு 71% வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

250,000 ரூபா சம்பளம் பெறுபவருக்கு 61% வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

300,000 ரூபா சம்பளம் பெறுபவருக்கு 47% வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

350,000 ரூபா சம்பளம் பெறுபவருக்கு 25.5% வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

அதிக வருமானம் பெறுபவர்களுக்கு குறைந்த நிவாரணம் மற்றும் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு அதிக நிவாரணம் என நாம் உழைக்கும் போது செலுத்தும் வரி திருத்தத்தில் மேற்கொண்டோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a comment

Comment