TamilsGuide

ஒரு காலத்தில் பெரிதும் கொண்டாடப்பட்ட கனடா பிரதமர் - இன்று சொந்தக் கட்சியிலேயே எதிர்ப்பு

ஒரு காலத்தில் பெரிதும் கொண்டாடப்பட்ட கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு, இன்று சொந்தக் கட்சியிலேயே எதிர்ப்பு உருவாகியுள்ளது.

நல்ல மாற்றங்களைக் கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்த ஜஸ்டின் ட்ரூடோ 2015ஆம் ஆண்டு கனடாவின் பிரதமரானபோது, நாடே அவரைக் கொண்டாடியது.

ஆனால் இன்று, நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி, தூதரக உறவுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் ஆகிய விடயங்கள், ட்ரூடோ மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை இழக்கச் செய்துள்ளன.

ட்ரூடோ பதவி விலகவேண்டும் என அவரது கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் அழுத்தம் கொடுக்கும் நிலை உருவாகியுள்ளது.

ஆளுங்கட்சி அமைச்சர்களில், நிதி அமைச்சரான கிறிஸ்டினா ஃப்ரீலேண்ட், வீட்டு வசதித்துறை அமைச்சர் Sean Fraser ஆகியோர் பதவி விலகிவிட்டார்கள்.

இதற்கிடையில், ட்ரூடோ மீதான கோபத்தை தொலைக்காட்சி நேரலையில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள் கனடா பொதுமக்கள்.

பிரதமரே, நீங்கள் கனடாவைக் கைவிட்டுவிட்டீர்கள், நீங்கள் நாட்டை நாசமாகிவிட்டீர்கள், பதவி விலகுங்கள் என நேரலை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கொந்தளித்துள்ளார்கள் மக்கள்.

உங்கள் தந்தையின் நேர்மை முதலான குணங்கள் உங்களிடம் கொஞ்சம் கூட இல்லை.

உங்களைச் சுற்றி இருப்பவர்களே உங்களைக் கைவிடத் துவங்கியுள்ளார்கள்.

நிதி அமைச்சரான கிறிஸ்டினா ஃப்ரீலேண்ட், வீட்டு வசதித்துறை அமைச்சர் Sean Fraser ஆகியோர் வெளியேறிவிட்டார்கள். இது நீங்கள் வெளியேறும் நேரம், என தங்கள் கோபத்தைக் கொட்டிவிட்டார்கள் பொதுமக்கள்.

நீங்கள் ஒன்றும் மன்னர் அல்ல, கனடாவில் தேர்தல் நடத்துவதற்கான நேரம் வந்துவிட்டது என்கிறார் ஒருவர்.

ஆக, சொந்தக் கட்சிக்குள்ளும், எதிர்க்கட்சியினரிடையேயும் மட்டுமல்ல, பொதுமக்களிடையிலேயும் ட்ரூடோவுக்கு கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.
 

Leave a comment

Comment