1915 ஆம் ஆண்டில் கட்டமைக்கப்பட்ட தலை மன்னாரில் அமைந்துள்ள இந்த வெளிச்ச வீடு , இலங்கையின் வடக்கு பகுதியில் மீனவர்கள், மற்றும் இந்த பகுதி ஊடாக கடல் வழியாக பயணிப்பவர்களுக்கு திசையை அறிந்து கொள்வதற்றகு, வழி காட்டியாக இந்த வெளிச்ச வீடு திகழ்கிறது.
இந்த வெளிச்ச வீடு சிலிண்டர் வடிவமுள்ள கல் கட்டமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 19 மீட்டர் (62 அடி) உயரமான இதன் தூண் வெண்மையாக மிளிர்கிறது, மேலும் மின்விளக்கும், பார்வை மேடையும் கொண்டுள்ளது.
20ஆம் நூற்றாண்டின் தொடக்ககால வெளிச்ச வீடாக , இது எளிமையான மற்றும் செயல்பாட்டுமிக்க வடிவமைப்பைப் பெற்றுள்ளது.
மன்னார் தீவின் இந்த வெளிச்ச வீடு ஒவ்வொரு 5 விநாடிகளுக்கும் ஒளி வெளிச்சம் விடுகிறது. இதன் மைய உயரம் 17 மீட்டர் (56 அடி) ஆகும், மேலும் இதன் ஒளி 10 கடல் மைல்கள் (19 கி.மீ அல்லது 12 மைல்கள்) தூரம் வரை தெளிவாக காட்சியளிக்கிறது. இது அப்பகுதி கடல் வழிகளில் பயணிக்கும் கப்பல்களுக்கு மிக அவசியமான பார்வை உதவியை வழங்குகிறது.
1915 ஆம் ஆண்டிலிருந்து இயங்கிவரும் இந்த வெளிச்ச வீடு, மன்னார் தீவின் கடல் வழிப் பயணங்களை பாதுகாப்பாகச் செய்ய முக்கிய பங்கை வகிக்கிறது. அதன் தொடர்ந்த செயல்பாடு, இவ்விடத்தின் கடல்சார் பாதுகாப்பு முக்கியத்துவத்தை நிரூபிக்கிறது.


