TamilsGuide

கனடா மாகாண கவர்னர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்களே - ஒரே போஸ்டில் ஒரு நாட்டையே ஏப்பம் விட்ட டிரம்ப்..

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்டு டிரம்ப் கனடாவை அமேரிக்காவின் 51 வது மாகாணமாக பொருள்படும்படி அந்நாட்டின் பிரதமர் ட்ரூடோவை [மாகாண] கவர்கனர் ட்ரூடோ என்று தனது சமூக வளைதல பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். டிரம்ப் சொந்தமாக நடத்தி வரும் ட்ரூத் சோஷியல் என்ற சமூக ஊடகத்தில் அவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.

டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், ஸ்டேட் ஆப் கானடாவின் கவர்னர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் இரவு உணவருந்தியது மகிழ்ச்சியாக இருந்தது vஎன்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார், மேலும் , கனடாவின் கவர்னர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் சேர்ந்து, விரைவில் மீண்டும் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். மற்றும் எங்களிடையில் நடக்கும் வர்த்தகம், வரி குறித்த பேச்சுவார்த்தை பிரமிக்க வைக்கும் வகையில் அமையும் என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக கடந்த நவம்பர் 25 அன்று, அமெரிக்காவிற்குள் குடியேறுபவர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலைக் கனடாவும், மெக்சிகோவும் தடுக்கவில்லையென்றால் பதவியேற்றவுடன் இரு நாட்டு பொருட்களுக்கும் 25 சதவீத வரிகளை விதிக்க திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் கூறினார்.

அமெரிக்க வர்த்தகத்தை அதிகம் சார்ந்துள்ள கனடா இதனால் பெரும் பாதிப்பை சந்திக்கும் என்பதால் கனடா அதிபர் ட்ரூடோ பதறியடித்துக்கொண்டு கடந்த நவம்பர் 30 ஆம் தேதி அமேரிக்கா சென்று டிரம்பை அவரது எஸ்டேட்டில் வைத்து சந்தித்தார்.

ஃபாக்ஸ் நியூஸ் செய்தியின்படி, அன்றைய தினம் டிரம்ப் இரவு விருந்தின் போது ட்ரூடோவிடம், எல்லைப் பாதுகாப்பு, போதைப்பொருள் கடத்தல் மற்றும் வர்த்தக குறைகளை நிவர்த்தி செய்ய தனது வரி உயர்வு அவசியம் என்று தெரிவித்துள்ளார்.

அத்தகைய வரி கனேடிய பொருளாதாரத்தை அழித்துவிடும் என்றும் எல்லையில் அதிக கவனம் செலுத்துவதாகவும் ட்ரூடோ கூறியுள்ளார். இந்த உரையாடலின்போது, ஒருவேளை கனடா அமெரிக்காவின் 51வது மாகாணமாக மாறக்கூடும் என ட்ரூடோவிடம் கேலியாக சொன்னார் என்றும் ஃபாக்ஸ் நியூஸ் குறிப்பிட்டது.

இந்நிலையில் அதை உறுதிப்படுத்தும் வகையில் டிரம்ப் நேரடியாகவே தனது சமூக வலைத்தளத்தில் கனடாவை அமெரிக்காவின் மாகாணமாகக் குறிப்பிட்டு ட்ரூடோவை ஆளுநராக குறிப்பிட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது. 
 

Leave a comment

Comment