TamilsGuide

பிரித்தானியாவில் இடம்பெற்ற பயங்கர விபத்து - 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

பிரித்தானியாவில் உள்ள கம்பிரியா நகரில் கார் ஒன்று தவறான திசையில் சென்று மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் ஸ்கோடா மற்றும் டொயட்டோ ரக கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கம்பிரியா பொலிஸார் கூறும்போது,

விபத்தில், கேம்பிரிட்ஜ்ஷைர் பகுதியை சேர்ந்த ஸ்கோடா ரக காரின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுதவிர, 42 வயது ஆண், 33 வயது பெண், 7 மற்றும் 15 வயதுடைய 2 சிறுவர்களும் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். 

டொயட்டோ காரில் வந்த 4 பேரும் கிளாஸ்கோ பகுதியை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது, இவர்கள் அனைருவம் ஒரே குடும்ப உறுப்பினர்களா? என்பது அடையாளம் காணப்படவில்லை.

விபத்தில் பாதிக்கப்பட்ட 7 வயதுடைய மற்றொரு சிறுவன் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார். அவர்களை அடையாளம் காண பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
 

Leave a comment

Comment