TamilsGuide

மாத்தறை-ருவன்வெல்ல பகுதியில் துப்பாக்கிச் சூடு- ஒருவர் உயிரிழப்பு

மாத்தறை – ருவன்வெல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் 53 வயதான நபர்  ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காரில் வந்த மர்ம நபர்கள் முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த நபர் மீது குறித்த துப்பாக்கிச் சூட்டினை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், இவர் தவனைகளை செலுத்தாத வாகன உரிமையாளர்களிடமிருந்து வாகனங்களை பறிமுதல் செய்பவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை  துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
 

Leave a comment

Comment