TamilsGuide

இலங்கையின் ஆராய்ச்சி துறைகளை வலுப்படுத்துவதற்கு தென்னாபிரிக்க அரசாங்கம் விசேட கவனம்

இலங்கையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறைகளை வலுப்படுத்துவதற்கு தென்னாபிரிக்க அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருவதாக தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் Sandile Edwin Schalk தெரிவித்துள்ளார்.

பிரதமர் ஹரிணி அமரசூரிவுக்கு தென்னாபிரிக்க ஆபிரிக்க உயர்ஸ்தானிகருக்கும் இடையில் இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

இதேவேளை இலங்கைக்கும் தென்னாபிரிக்காவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேம்படுத்துதல், நாட்டில் உற்பத்தித் துறையை வலுப்படுத்துதல், சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்தல் மற்றும் கல்வித்துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது மற்றும் பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு ஆகிய விடயங்கள் தொடர்பில் மேலும் கலந்துரையாடப்பட்டிருந்தது

இதில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் மஹிந்த குணரத்ன மற்றும் தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகராலயத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
 

Leave a comment

Comment