TamilsGuide

தாமரைக் கோபுரத்திலிருந்து வீழ்ந்து உயிரிழந்த மாணவி - மேலதிக தகவலை வெளியிட்ட பொலிஸார்

கொழும்பு, தாமரைக் கோபுரத்தில் நேற்று (07) மாலை தவறி வீழ்ந்து உயிரிழந்தாக கூறப்படும் பாடசாலை மாணவி குறித்த தகவலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

குறித்த மாணவி கட்டிடத்தின் 29 ஆவது மாடியில் இருந்து 03 ஆவது மாடிக்கு குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இவர் கொள்ளுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 16 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

அவர், கொழும்பில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் தரம் 11 இல் கல்வி கற்று வருவதும், பாடசாலை முடிந்து தாமரை கோபுரத்திற்கு சென்று 29 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொம்பனி வீதி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட பாடசாலை மாணவன் மற்றும் மாணவியின் தோழியே இந்த பாடசாலை மாணவி எனவும், இதனால் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாக உயிரிந்த மாணவியின் தந்தை பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கொழும்பு, தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை மருதானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a comment

Comment