TamilsGuide

கொழும்பு, கெசல்வத்தை பகுதியில் பெண் படுகொலை

கொழும்பு, கெசல்வத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெக்னிகல் சந்தி பகுதியில் இன்று அதிகாலை பெண்ணொருவர் கூறிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

32வயதான குறித்த பெண் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்துள்ள பெண்ணுக்கும் மற்றுமொரு நபருக்கும் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாகவும், கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும்  பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
 

Leave a comment

Comment