TamilsGuide

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு

காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது.

அதன்படி கேகாலை மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கு முதல் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளதுடன் கொழும்பு பிரதேசத்தில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

மேலும் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பில் நேற்று காலை 08.30 முதல் இன்று காலை 7.00 மணி வரையான காலப்பகுதியில் வல்லாவிடத்தில் 112 மில்லிமீற்றரும் ஹொரணை பிரதேசத்தில் 111 மில்லிமீற்றர் மழையும் பெய்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
 

Leave a comment

Comment