TamilsGuide

பொலிஸ் தலைமையகத்தில் விசேட கலந்துரையாடல்

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன தலைமையில் பொலிஸ் தலைமையகத்தில் நேற்று (3) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய தேசிய மட்ட குற்றங்கள், மோசடிகள் மற்றும் விசேட குற்றச் செயல்கள் தொடர்பில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு விசாரணைகளின் முன்னேற்றத்தை அறிந்து கொள்வதற்காக இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, பொலிஸ் உயர் அதிகாரிகள் குழு மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவும் இந்த கலந்துரையாடலில் பங்கெடுத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பல முக்கிய விசாரணைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், கலந்துரையாடல் தொடர்பான விடயங்கள் தொடர்பான அறிக்கை தயாரிக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
 

Leave a comment

Comment