TamilsGuide

ரஜினிகாந்த் பூரண குணமடைய வேண்டி மகள் சவுந்தர்யா பிரார்த்தனை

நடிகர் ரஜினிகாந்த் தனியார் மருத்துவமனையில் கடந்த 30-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். இதயத்தில் இருந்து ரத்தத்தை உடலின் பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லும் மகா தமனியில் ('அயோர்டா') அவருக்கு வீக்கம் இருந்தது. அறுவை சிகிச்சை இல்லாமல், இடையீட்டு சிகிச்சை மூலம் அதனை சரி செய்ய முடியும்.

அதன்படி, முதுநிலை இதய இடையீட்டு சிகிச்சை நிபுணர் டாக்டர் சாய் சதீஷ் தலைமையிலான குழுவினர், மகா தமனி வீக்கத்தை முற்றிலும் சரிசெய்யும் வகையில் 'ஸ்டென்ட்' -ஐ அந்த இடத்தில் பொருத்தி உள்ளனர். இது ரத்த நாள சீரமைப்பு சிகிச்சை ஆகும். தற்போது ரஜினிகாந்தின் உடல் நிலை சீராக உள்ளது.

சிகிச்சையை தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் இன்று வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாளை டிஸ்சார்ஜ் என மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடுள்ளது.

இருப்பினும், ஐசியூவில் இருந்து தனி வார்டுக்கு மாற்றப்பட்ட ரஜினியை மருத்துவக்குழு கண்காணித்து வருகிறது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் பூரண உடல் நலம் பெற வேண்டி சென்னையில் உள்ள வடிவுடையம்மன் கோயிலில் அவரது மகள் செளந்தர்யா தனது கணவருடன் சென்று பிரார்த்தனை மேற்கொண்டார்.

Leave a comment

Comment