TamilsGuide

காட்டு யானை தாக்கி பெண் பலி

மஹியங்கனை பகுதியில் காட்டு யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவி்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் திக்கொட சேரானகம பகுதியை சேர்ந்த 80 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இன்று காலை குறித்த சம்பவம்  இடம்பெற்றுள்ளதுடன் காட்டு யானை தாக்கிய பெண் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a comment

Comment