TamilsGuide

கிளப் வசந்த கொலை சம்பவம்-கடுவெல நீதவான் பிறப்பித்த உத்தரவு

கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா உள்ளிட்ட 12 சந்தேக நபர்களும் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை ஜூலை 8-ம் தேதி அதுருகிரியில் கிளப் வசந்தா உள்ளிட்ட இருவரைக் கொலை செய்த நிலையில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த துப்பாக்கிச் சூடு நடத்தியவரும், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் வந்த காரை ஓட்டிச் சென்ற ஓட்டுநரும் கடந்த மாதம் 28-ம் தேதி கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment