• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை எதிர்கொள்ளவிருக்கும் கனேடிய பிரதமர் ட்ரூடோ

கனடா

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் அரசு நம்பிக்கையில்லா தீர்மானத்தால் கவிழ்க்கப்படும் அபாயத்தில் உள்ளது.

இதனால் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தி புதிய தேர்தல் ஏற்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளது.

எனினும், இந்த தீர்மானம் நிறைவேற்றப்படும் வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருக்கிறது.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெறும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சியான கனசர்வேட்டிவ் கட்சி முன்னிறுத்தியுள்ளது.

ட்ரூடோவின் மக்கள் ஆதரவு மிகத்தகவு சரிந்துள்ளதையும் கருத்து கணிப்புகள் காட்டுகின்றன.

இருப்பினும், புதிய ஜனநாயகக் கட்சி (NDP) மற்றும் Bloc Québécois கட்சியின் தலைவர்கள் இந்த தீர்மானத்தை ஆதரிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளனர்.

ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஒன்பது ஆண்டுகளாக கனடாவின் பிரதமராக இருந்து வருகிறார். தற்போது அவரது ஆட்சி சிறுபான்மையிலான அரசாக இயங்கிவருகிறது.

NDP கட்சியுடனான ஒப்பந்தம் மூலம் கடந்த 2021ஆம் ஆண்டு இடைக்கால தேர்தலின் பின்னர் அவர் ஆட்சியில் நீடித்தார். ஆனால், செப்டம்பர் மாதத்தில் NDP தலைவர் ஜக்மீத் சிங் இவ்வமைச்சரவை ஒப்பந்தத்திலிருந்து விலகியதைத் தொடர்ந்து ட்ரூடோவின் அரசுக்கு கடும் அழுத்தம் ஏற்பட்டது.

நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு 338 நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையினரின் ஆதரவு தேவை. லிபரல் கட்சியில் 153 உறுப்பினர்கள் உள்ளனர், அவர்கள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க இருப்பதால், தீர்மானம் தோல்வியடையும் வாய்ப்பு அதிகம்.

கன்சர்வேட்டிவ் கட்சியில் 119 உறுப்பினர்கள் உள்ளனர், அவர்கள் தீர்மானத்தை ஆதரிக்கக் கூடும்.

ட்ரூடோவின் ஆதரவு விகிதம் 63% இருந்தது, 2024 ஜூன் மாதம் 28% ஆகக் குறைந்துள்ளது. இதற்கு பொருளாதாரச் சிக்கல்கள், வீட்டு வாடகை மற்றும் வாழ்க்கைச் செலவுகளின் உயர்வு போன்ற காரணங்கள் முக்கியமானவையாக உள்ளன.

தற்போது ட்ரூடோ தனது அரசின் திட்டங்களை நிலைநிறுத்துவதற்காக போராடுவதாகவும், அவர் கனடியர்களுக்கு உதவும் வகையில் புதிய முதலீடுகளைத் தொடர்ந்து செய்யப்போவதாகவும் தெரிவித்துள்ளார். 
 

Leave a Reply