TamilsGuide

கே.எம்.மகிந்த சிறிவர்தன, தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்

நிதி, பொருளாதார அபிவிருத்தி, தேசிய கொள்கைகள், திட்டமிடல் மற்றும் சுற்றுலா அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கே.எம்.மகிந்த சிறிவர்தன இன்று தனது கடமைகளை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.

நிதி அமைச்சின் கீழ் உள்ள அனைத்து திணைக்களங்களினதும் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

முன்னதாக சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதிகளை பெற்றுக்கொள்வதற்கும், கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் போதும் நிதி அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய காலங்களில் சிறப்பாக தனது கடமைகளை நிறைவேற்றியுள்ளார்.

மகிந்த சிறிவர்தன சர்வதேச நாணய நிதியத்தில் இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளுக்கு மாற்று நிர்வாக பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment