TamilsGuide

பரீட்சை வினாத்தாள் கசிவு விவகாரம் -மேலும் ஒருவர் கைது

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கைதானவர் குருணாகல் பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவர் ஆவார்.

இவர், சட்டத்தரணி ஊடாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை கடுவலை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் திட்டமிடல் திணைக்கள பணிப்பாளர் முன்னதாக கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment