TamilsGuide

பேருந்திற்காக நீண்ட வரிசையில் பொதுமக்கள்

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காகச் சொந்த இடங்களுக்குச் சென்றுள்ள பொது மக்கள், மீண்டும் கொழும்பிற்குத் திரும்புவதற்குப் போதியளவு பேருந்துகள் இல்லை என குற்றம் சுமத்தியுள்ளனர்.

அத்துடன் போதிய அளவு பேருந்து இன்மையால் தாம் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், இதனால் பல்வேறு அசௌகரியங்களுக்கு தாம் முகம் கொடுத்துள்ளதாகவும் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தனியார் பேருந்துகள் நாளை முதல் வழமை போன்று இயங்கும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment