TamilsGuide

தேர்தல் முடிவுகள் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது! -அஹிம்சா விக்கிரமதுங்க

2024 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் தமக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளதாக மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்கிரமதுங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்ட அஹிம்சா விக்கிரமதுங்க, இலங்கையின் அண்மைக்கால மனித உரிமை வரலாற்றில் இடம்பெற்றுள்ள அட்டூழியங்களை இப்புதிய தலைமை நிறைவேற்றும் எனத் தான் நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ராஜபக்சவின் பயங்கரவாத ஆட்சியின் கீழ் பயங்கரமான இழப்புகளை சந்தித்த எனது தந்தை மற்றும் பல குடும்பங்களுக்கு நீதி வழங்குவதாக உறுதியளித்த அனுரகுமார திஸாநாயக்காவுக்கு தான் இந்த சந்தர்ப்பத்தில் வாழ்த்துத் தெரிவிப்பதாகவும் அஹிம்சா  மேலும் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a comment

Comment